ETV Bharat / state

மருத்துவ படிப்பில் 2 இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உயர்நீதிமன்றம் ஆணை!

மருத்துவ படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Dec 17, 2022, 5:39 PM IST

பழங்குடியினர் மருத்துவ இடஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு
பழங்குடியினர் மருத்துவ இடஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுத்திருந்தும் இட ஒதுக்கீட்டில் தமக்கு இடம் கிடைக்கவில்லை. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கலந்தாய்வின் முடிவில் காலியாக இருந்த இரண்டு இடங்கள் பட்டியலினத்தவர்களைக் கொண்டு நிரப்பட்டதாகவும், தற்போது அவர்கள் ஜிப்மர் கல்லூரிக்கு சென்று விட்டதால், தற்போது பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்குப் பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களைக் கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரர் மற்றும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவு மாணவருக்கும் இரு இடங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தை உருவாக்கிய அரசு, அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் கடினமான நிலைக்கு அவர்களைத் தள்ளாது என நீதிமன்றம் நம்பிக்கை வைத்துள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு இடங்களை ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தோர், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோரின் இட ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுத்திருந்தும் இட ஒதுக்கீட்டில் தமக்கு இடம் கிடைக்கவில்லை. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கலந்தாய்வின் முடிவில் காலியாக இருந்த இரண்டு இடங்கள் பட்டியலினத்தவர்களைக் கொண்டு நிரப்பட்டதாகவும், தற்போது அவர்கள் ஜிப்மர் கல்லூரிக்கு சென்று விட்டதால், தற்போது பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்குப் பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களைக் கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரர் மற்றும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவு மாணவருக்கும் இரு இடங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தை உருவாக்கிய அரசு, அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் கடினமான நிலைக்கு அவர்களைத் தள்ளாது என நீதிமன்றம் நம்பிக்கை வைத்துள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு இடங்களை ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தோர், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோரின் இட ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.